Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கணவரை கொன்று வீட்டினுள் புதைத்த மனைவி… தகாத உறவால் நேர்ந்த கொடூரம்…
    இந்தியா

    கணவரை கொன்று வீட்டினுள் புதைத்த மனைவி… தகாத உறவால் நேர்ந்த கொடூரம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்டிராவில், தகாத உறவால் தனது கணவரை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் சவான் – கோமல் சவான் தம்பதி. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமலுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவாரான மனு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாகவும் மாறியுள்ளது.

    வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனுவுடன் வெளியே செல்வதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளார் கோமல். இது குறித்து அக்கம் பக்கத்தினர் விஜய் சவானிடம் தெரிவிக்க, அவரோ மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜய் சவானை மீறி மனுவுடனான உறவை நீடித்து வந்துள்ளார் கோமல்.

    கணவர் உயிருடன் இருக்கும் வரை தனது உறவுக்கு அவர் இடையூறாக இருப்பார் என்பதால், விஜய் சவானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார் கோமல். அதன்படி விஜய் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மனு, பின்பக்கமாக அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மனுவுடன் சேர்ந்து கோமலும் விஜய்யை கடுமையாக தாக்க, இதில் நிலை தடுமாறிய விஜய் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு இருவரும் சேர்ந்து விஜய்யின் உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டிற்குள்ளேயே அவரது உடலை புதைத்து, அந்த இடத்தில் புதிய டைல்ஸ் கற்களை பதித்துள்ளனர்.

    காணாமல் போன விஜய் சவானை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடி வர, கோமல் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. விசாரித்ததில், வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை எனக் கூறி மழுப்பியுள்ளார். இதனை நம்பாத விஜய்யி சகோதரர்கள் வீட்டை சோதனையிட்ட போது, ஒரு இடத்தில் மட்டும் புதிய டைல்ஸ் கற்கள் பதிந்திருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.

    அங்கிருந்து துர்நாற்றமும் வீச, உடனே அந்த இடத்தை தோண்டி பார்த்தப் போது, விஜய் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விஜய் உடலை மீட்டனர். மேலும் தலைமறைவான கோமல் மற்றும் மனு ஆகியோரை தேடி வருகின்றனர்.

    crimenews illegal affair india maharashtra murder இந்தியா கொலை தகாத உறவு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: மூன்று நீதிபதிகள் அமர்வு முக்கிய உத்தரவு!
    Next Article முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    October 10, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.