அமெரிக்காவுடனான தற்போதைய வரிக் கட்டணப் பிரச்சினைக்கு மத்தியில், மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் வரிக் கட்டணங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில்,  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். அப்போது பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், டிரம்பின் ஆதரவாளரான பிரதமர் மோடி ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மோடியை ஓய்வுபெறச் செய்து, மார்க் தர்ஷன் மண்டலில் வசிக்கச் சொல்ல வேண்டுமா என்பதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மோடி கொண்டுள்ள நட்பு, இந்திய ஜனநாயகத்திற்கும் பாஜகவிற்கே கூட ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக அமைகிறது என்று சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version