பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானது. பிறகு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இந்தியா பாகிஸ்தானை தாக்குவதற்கு முன்பாகவே காஷ்மீர் சுற்றிவட்டார மாநிலங்களில் போர் ஒத்திகை நடைபெற்றது.
அதேபோன்று, தற்போதும் போர் ஒத்திகையானது நடைபெறுகிறது. போர் ஒத்திகையின் போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் நாளை (29.05.2025) போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையின் போது கடுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு, செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்படவுள்ளது. மேலும் மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு, மீட்புக் குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.