இலங்கை சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காக 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த புத்த துறவிகள், மீண்டும் தாய்நாடு திரும்பிய போது, அவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது 22 புத்த துறவிகளின் உடைமைகளில் பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

100 கிலோ எடையிலான இந்த போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.110 கோடி ஆகும். குஷ் மற்றும் ஐஸ் என்னும் இந்த போதைப் பொருட்களை புத்த துறவிகள் முதன்முறையாக கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏழை மாணவர்களுக்காக நோட்டுப் புத்தகங்களை அதிகமாக வாங்கிக் கொண்டுவந்த புத்த துறவிகள், அவை வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ரகசிய அறை அமைத்து அதில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இந்த கடத்தல் புத்த துறவிகளுக்கு தெரியாமலேயே நடந்ததாகவும்  ஒருதகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்தான், அவர்களை சுற்றுலா அழைத்து சென்றதாகவும், போதைப் பொருள் கடத்தல் குறித்து தங்களுக்கு தெரியாது என துறவிகள் விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version