அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காமேனி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் காமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தார்.

நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமேனியின் மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கியத் தளபதிகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது அண்டை நாடுகளான துபாய், குவைத் போன்ற இடங்களில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானின் உச்ச தலைவராக இருந்த 86 வயதான அலி காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியலிலும் சர்வதேச உறவுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version