ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் கடல் எல்லைக்குள் மொம்பாசா மற்றும் அல் பஹியா என்ற ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைகள் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு இந்தியக் கப்பல் ஊழியர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
https://x.com/modgovae/status/2076804834754453830?
ஓமானின் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் மொம்பாசா மற்றும் அல் பஹியா என்ற எண்ணெய்க் கப்பல்கள் குறிவைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த பணியாளர் மொம்பாசா கப்பலில் இருந்தவர் என்றும் காயமடைந்த எட்டு பேரில், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர் என்றும் காயமடைந்தவர்களில் ஆறு பேர் இந்திய நாட்டினர் மற்றும் இரண்டு பேர் உக்ரேனிய நாட்டினர் என்று அமைச்சகம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலால் கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இரண்டு டேங்கர்களுக்கும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஒரு “அப்பட்டமான தாக்குதல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியாகப் பதிலடி கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்தது.
இதற்கிடையில், ஓமானின் கல்ஹத்திற்கு வடகிழக்கே 40 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் முகமை செவ்வாயன்று தெரிவித்தது. எறிபொருள் வலது பக்க இயந்திர அறையைத் தாக்கியதாகவும், அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் டேங்கரின் மாஸ்டர் தெரிவித்ததாக UKMTO கூறியது.
