அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி ஈரானைக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தக்குதலை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளுக்கு கப்பல்களில் எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டது.
பின்னர் அமெரிக்கா பேச்சு வார்த்தையை மேற்கொண்ட நிலையில், இந்த தடை வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறி வந்தது.
இந்தச் சூழலில் ஈரானின் ஹெலிகாப்டர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. அத்துடன், அந்த கடல்வழியில் சரக்குகப்பல்கள் உள்பட அனைத்துவிதமான போக்குவரத்தும் மூடப்படுவதாகவும், தங்கள் உத்தரவை மீறி கடக்கமுயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version