ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஒரு ரகசிய ஆலோசனையை நடத்தினார். இந்த உரையாடலின் போது, ஈரானின் தற்போதைய ராணுவ பலம் மற்றும் அரசியல் சூழலை ஆய்வு செய்த ட்ரம்ப், “ஈரான் விரைவில் சரணடையப் போகிறது” என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முந்தைய தலைமையையும், அதன் செயல்பாடுகளையும் “அனைவரையும் அச்சுறுத்திய புற்றுநோய்” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) மூலம் அந்த அச்சுறுத்தலைத் தான் அகற்றிவிட்டதாகப் பெருமிதம் கொண்டார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனியை ஒரு “பலவீனமான நபர்” என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானில் தற்போது ஒருமித்த தலைமை இல்லாததால், யாரால் சரணடைவை அறிவிப்பது என்று கூடத் தெரியாத குழப்பத்தில் அந்த நாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போரினால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் கவலை தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சூழல் மேம்பட்டு வருவதாகவும், விரைவில் வணிகக் கப்பல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் உறுதியளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version