Close Menu
    What's Hot

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி
    உலகம்

    காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PAK 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் காலாவதியானவை என தெரிய வந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வரலாறு காணாத அளவில் இலங்கையை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.

    வெள்ள பாதிப்பில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள சுமார் 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் நிகழ்ந்த  மிக மோசமான இயற்கை பேரிடர் இது என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இதுவரை 53 டன் அத்தியாவசிய பொருட்களையும், மீட்புப் படையினரையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று, சீனாவும் இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

    இந்தநிலையில், இலங்கைக்கு உதவும் விதமான பாகிஸ்தானும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையின் பேரிடர் காலத்தில் பாகிஸ்தான் துணை நிற்கும் என்று கூறி, இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரண பொருட்களின் புகைப்படத்தை குறிப்பிட்டிருந்தது. இது, தற்போது பேசு பொருளாகி உள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்களின் காலாவதி தேதி அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவசரகால தேவைக்காக அனுப்பிய பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், காலாவதியாகவும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை, கவனத்தில் கொண்ட இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளி விவகார துறை, பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தனது அதிருப்தியை தெரியப்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியது தவறான செயல் என்று பாகிஸ்தான் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் – வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அதிரடி !!!
    Next Article சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்
    Editor TN Talks

    Related Posts

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஷாக்!. இந்தியாவில் வெறிநாய் கடிக்கு போலி தடுப்பூசி!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.

    December 27, 2025

    அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து!. 22,349 விமானங்கள் தாமதம்!.

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    சினிமா ஜனநாயகன்’ இசை விழா… ரசிகர்களுக்காக.. கடைசி மேடையில் விஜய் தரும் பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    பாஜக வலுவடைந்தால் அதிமுக காணாமல் போய்டும்! திருமா எச்சரிக்கை

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.