Close Menu
    What's Hot

    பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக பச்சை துரோகம்!. திட்டமிட்டு ஏமாற்றும் வேலையா? தங்கம் தென்னரசு ட்வீட்!

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்
    உலகம்

    சிறையில் மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் இம்ரான் கான்!- சகோதரி தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    imrs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் உள்ள போதும், மன ரீதியாக அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அவரது சகோதரி உஸ்மா கான் குற்றம்சாட்டி உள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73), பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சி நடத்தி வருகிறார். 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது முன்வைக்கப்பட்டன.

    இதையடுத்து, எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதனையடுத்த  இம்ரான் கான் மீது  முன்வைக்கப்பட்ட ஊழல் முதல் பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்குகளில் கடந்த 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் உள்ள அவர், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்று இம்ரான் கான் குடும்பத்தினர் கூறி வந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த சிறை நிர்வாகம், இம்ரான் சகோதரிகளில் ஒருவரான உஸ்மா கானுக்கு அனுமதி வழங்கியது.

    இந்தநிலையில், சிறையில் இம்ரான் கான் உயிருடன் இருப்பதாக உஸ்மான் கான் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கு மன ரீதியான சித்ரவதைகள் தரப்படுவதாக குற்றம்சாட்டினார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுடன் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்று உஸ்மா கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் இம்ரான் கானின் உடல்நலம் குறித்த சர்ச்சை ஓய்ந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!: இலங்கை அதிருப்தி
    Next Article ரோஹித் ஷர்மா விளையாடுகையில் நான் பள்ளி மாணவன் – நினைவு கூர்ந்த தெம்பா பவுமா !!!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக பச்சை துரோகம்!. திட்டமிட்டு ஏமாற்றும் வேலையா? தங்கம் தென்னரசு ட்வீட்!

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    Trending Posts

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.