கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த, சில மணி நேரம் கழித்து, தாய்லாந்திலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களள் பிணைக் கைதிகளாக கடத்திச்செல்லப்பட்டனர்.
தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லாவின் படோங் துணை மாவட்டத்தில் உள்ள படோங் பிரதான் கிரிவிட் பள்ளியில் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். உள்ளூர் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினர். மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் உள்ளூர் ஊடகங்களின்படி, துப்பாக்கிதாரி ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் ஒரு ஆசிரியர் காயமடைந்தார், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தகவல்கள் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்ததாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பல மாணவர்களும் ஆசிரியர்களும் இன்னும் பள்ளிக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். துங் லுங் காவல் நிலையம் பள்ளியை சுற்றி வளைத்துள்ளது. சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version