ஈரானுடன் நிலவி வந்த போர்ச் சூழலில் அமெரிக்கா முழுமையான ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

“இந்த போரில் நாம் வென்றுவிட்டோம். ராணுவ ரீதியாக ஈரான் தற்போது செயலிழந்துவிட்டது,” என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் அமெரிக்கப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பில் எந்தவிதத் தடையுமின்றி பறந்ததாகவும், அதைத் தடுக்கும் வலிமையற்று ஈரான் ராணுவம் வேடிக்கை பார்த்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த ராணுவத் தோல்வியால், ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். “அவர்கள் இப்போது எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும்,” என்று அவர் கூறினார். ஆனால், டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் அரசு உடனடியாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், டிரம்பின் கருத்துக்கள் வெறும் “உளவியல் போர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version