ஈரோட்டில் காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காதலியின் கழுத்தில் காதலன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் காவிரி சாலையை சேர்ந்த 19 வயதான பெண்ணும், சேலத்தை சேர்ந்த கபிலனும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்ததுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கபிலன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தப்பிச்சென்ற காதலன் கபிலனை வடக்கு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
