நாம் அன்றாடம் குடித்து வரும் குடிநீரில் இந்த இரண்டு பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடலில் பல நன்மைகள் வந்து சேரும். அந்த இரண்டு பொருட்கள் வேறு எதுவும் இல்லை கிராம்பு மற்றும் ஏலக்காய் தான். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ) அதில் 5 முதல் 6 கிராம்பு, 2 முதல் 3ஏலக்காய்களை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.

உதித்த பின்னர் அந்த தண்ணீரை உடனே அருந்தாமல் சிறிது நேரம் பாத்திரத்தை தட்டு வைத்து மூட வேண்டும். ஒரு ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஆறிய அந்த தண்ணீரை வடிகட்டி நீங்கள் உங்கள் விருப்பம் போல காலையில் மதிய வேளையில் மற்றும் இரவு நேரத்தில் குடித்துக்கொள்ளலாம்.
இந்த தண்ணீரை குடிப்பதனால் உங்கள் உடலில் பல நன்மைகள் ஏற்படும். உங்கள் ஜீரண சக்தி அதிகரிக்கும், வாய் துர்நாற்றம் முற்றிலுமாக அடங்கும், அதுமட்டுமின்றி உடலில் உள்ள தேவையில்லாத உஷ்ணம் நீங்கும்.
இந்த இரண்டு பொருட்களில் நுண்ணுயிரை எதிர்க்கும் சக்தியும் அதே நேரத்தில் அழற்ச்சியை குறைக்கும் திறனும் இருக்கிறது. இந்த தண்ணீரை தினமும் அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த இரண்டு பொருட்கள் அடங்கிய தண்ணீரை குடிப்பதன் மூலம் கேன்சர் போன்ற அதி தீவிர நோய்களை கூட வராமல் தடுக்கலாம்.
மேலும் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உங்கள் லேசாகவும் மிக சுறுசுறுப்பாகவும் இருப்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம்.
குறிப்பு : நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு தேவையான அளவு கிராம்பு மற்றும் ஏலக்காயை பயன்படுத்த வேண்டும். தினமும் அதிக அளவில் குடிக்காமல், ஒரு நாளைக்கு ஏற்றார் போல மிதமான தண்ணீரை அளந்து பருக வேண்டும். தொடர்ச்சியாக மிதமான தண்ணீரை பருகி வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள்உணரலாம்.
