காங்கிரஸ் கூட்டணியை விஜய் பேச வேண்டாம் என்று தேமுதிக பிரபாகரன் பேசி இருப்பதால் அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கடலூரி நடந்த தேமுதிக மாநாடு 2.0 மேடையில் வார்த்தைக்கு நாகரீகமற்ற முறையில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், ஜனநாயகன் பிரச்சனையை பயன்படுத்தி தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க பார்ப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதில், கடைசியாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பிரச்சனை போயிட்டு இருக்கு. விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ். ஏனென்றால் அரசியலில் நான் மூத்தவன் என்று நீங்களே சொல்லி இருக்கீங்க. இன்று காங்கிரஸ் கட்சி அவங்க பேரம் பேசுவதற்காகவும், கூட்டணிக்காகவும் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. அவங்க போடுற தூண்டிலில் நீங்க விழுந்துடாதீங்க. அவங்களை நம்பிடாதீங்க. நீங்க நல்லா வரனும். உங்க படம் சினிமாவோட வச்சிக்காங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்வதாக சொல்லி உங்க கூட கூட்டணி வந்து பேரம் பேசி எதுவும் செய்ய மாட்டாங்க. என்னோட சின்ன அட்வைஸ் இது” என்று சொல்லியுள்ளார்.
மேடையில் ”ஈன பயலுங்க..யாருடா நீங்க”ன்னு அநாகரீகமாக பேசிய விஜய பிரபாகரன் காங்கிரஸ் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கேள்வியாக உள்ளது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானை போல் திடீரென மேடை ஏறிய விஜய பிரபாகரன், காலங்காலமாக நாட்டையே ஆண்ட ஒரு தேசிய கட்சியை இப்படி கூச்சமின்றி பேசுவது அவரது அரசியல் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இன்னும் அரசியலில் பக்குவமும், அனுபவமும் விஜய பிரபாகரனுக்கு வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைமைகளின் அட்வைஸாகவும் உள்ளது.
