வரும் 16 ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொகுதியின் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.