வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் உழைத்துக்கொண்டே இருப்போம் என அமைச்சர் வெங்கட் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவர் ஆட்சியில்பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெரியாரின் கனவு மேலும் மேலும் நனவாகிக்கொண்டே இருக்கும்.

சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் மனம் விரும்பிய சமநீதி,சம வாய்ப்பு எங்கும் நிலைபெறும். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மக்களுக்கான மட்டுமே இயங்கும் நிர்வாகம் நீடித்து நிலைக்கும். வீரமங்கை வேலு நாச்சியாரின் மண் சார்ந்த உழைப்பையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த உழைப்பையும் பின் தொடர்வோம்.

காரணம்நம் வெற்றித் தலைவர் சட்டமன்றத்தில் சொன்னதுபோல, “இது அனைவருக்குமான அரசு. இது சாதி,மதங்களைக் கடந்த அரசு. இது பாகுபாடு காட்டாத அரசு. இது பண்பாடு காக்கும் அரசு. இது பண்பட்ட அரசு.” என் போன்ற வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் இதில் இருந்து ஒருபோதும் விலகாமல் உழைத்துக்கொண்டே இருப்போம் என அமைச்சர் வெங்கட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version