Close Menu
    What's Hot

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»‘திமுக வாக்குகளை கட் செய்தாலே…’ – நயினார் நாகேந்திரன் திகில் பேச்சு
    அரசியல்

    ‘திமுக வாக்குகளை கட் செய்தாலே…’ – நயினார் நாகேந்திரன் திகில் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாஜக சார்பில், எஸ்ஐஆர் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: பிஹார் போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எஸ்ஐஆரைக் கண்டு திமுக-வுக்கு பயம்.

    ஏனென்றால், எனது தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் மட்டும் இறந்து போனவர்கள் 30 பேர், வெளியூர் சென்றவர்கள் 40 பேர், இடம் மாறியவர்கள் 25 பேர் என 95 வாக்காளர்கள் இல்லை. எனவே, எஸ்ஐஆர் பணிகளை சரியாக செய்தால் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

    இவை அனைத்தும் திமுகவுக்கான வாக்குகள். திமுக-வின் வாக்குகளை கட் செய்தாலே நமது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பொறுப்புடன் பணி செய்தால் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்ஐஆர் குறித்து மக்களிடையே அவதூறு கருத்துகள் பரப்பப்படுகிறது. தமிழக அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான எதையும் செய்யவில்லை. உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கான பணிகளை மட்டும் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி பலத்தில் செய்து வருகிறார்.

    நெல்லில் ஈரப்பதம் பிரச்சினை ஏற்படுவதற்கு திமுக அரசு தான் காரணம். அறுவடைக்குப் பின் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்கு தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசிடம் உள்ள 6 சேமிப்பு கிடங்குகளையும் பயன்படுத்துவதில்லை. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தமிழக முதல்வர் தானே தவிர மத்திய அரசு இல்லை” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – உதயநிதிக்கு பாஜக கேள்வி
    Next Article காஞ்சியில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்: கியூஆர் கோடு நுழைவுச் சீட்டுடன் அனுமதி
    Editor TN Talks

    Related Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    July 17, 2026

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.