தேர்தலன்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றாமல் இருப்பதும் தேசத்துரோகம்தான் என சீமான் சீற்றம் காட்டியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் கடைசி வலிமையான ஆயுதம். அதனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்.
100 சதவீதம் வாக்குப்பதிவாகாத நிலையில், வாக்கு செலுத்தாதவர்களுகு என்ன பிரச்சினை என்னும் வினா எழுகிறது.
குண்டு வைப்பது, கொலை செய்வது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டு வரி கட்டாமல் இருப்பது, கணக்கு காட்டாமல் மறைப்பது இதுமட்டுமே தேசத்துரோகம் அல்ல.. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேசத்துரோகம்தான்.
நமது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்கில் இருந்தும்தான் மாற்றம் வரும். அதனால் என்னில் இருந்தும், உங்களில் இருந்தும்தான் மாற்றம் வரும்.
எல்லோரும் வாக்கு செலுத்தவேண்டியது என்பது நமது பொறுப்பு, கடமை.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
