2026ம்ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சரித்திர வெற்றி ஆண்டாக அமையும் என்றும், தமிழகத்தில் தர்மம் நிலைநாட்டப்படும் என்று ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சோதனைகளைக் கடந்த வெற்றிப் பயணம்:

 2025ம்ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, “நடந்தவை யாவும் நன்மைக்கே” என எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை, மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.

தர்மத்தின் வெற்றி:

“தர்மம் தாமதிக்கலாம், ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும்” என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026-ம் ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.

இலக்கு 26:

நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். “2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்” என்பதே அந்த நம்பிக்கை. இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல; இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.

புத்தாண்டு வாழ்த்துகள்:

இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும், சேவை மனப்பான்மையோடும் 2026-ஐ பா.ம.க-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஸ்ரீகாந்தி கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version