சட்டப்பேரவையில் தான் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் உள்ளே வந்த ஆளுநர் ஆர். என்.ரவி சில நிமிடங்களிலேயே அவையில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதனால் அவையில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்காமல் புறக்கணித்து வெளியேறியதாக கூறப்பட்டது. தான் பேசும்போது மைக் ஆஃப் செயப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததாக 13 காரணங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

இந்த நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, மகக்ளார் தேர்வு செய்யப்பட்ட அரசை ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். அரசு நிர்வாகத்தின் நிறை குறைகளை அரசியல்வாதியை போல் ஆளுநர் பேசுவது நல்லதல்ல. அவர் ஆளுநருக்கான பணியை செய்ய வேண்டும்.

சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். அதன் பிறகே விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்று விளக்கம் அளித்தார். எனினும் அதை ஏற்க மறுத்த ஆளுநர் தொடர்ந்து அவையின் உரையை வாசிப்பதை தவிர்த்து வருகிறார்.

ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுத்தும், நடத்தப்படும். ஆனால் ஆளுநர் இதையெல்லாம் புறக்கணித்து பாஜகவின் பிரதிந்தியாகவே செயல்படுகிறார்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version