ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திக்கப்பட்டது.

ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர்.

விசாரணையின் வாதம் தொடங்கியதும் முதலில் வாதிட்ட சென்சார் போர்டு தரப்பு, படத்தை மறு ஆய்வுக்குட்படுத்த விடாமல் சான்றிதழ் வழங்க தனி நீதியின் உத்தரவு பெற்றதாகவும், தங்கம் மீது தவறு இல்லை என்றும் வாதிடப்பட்டது. தொடர்ந்து தங்களின் வாதத்தை படத்தின் தயாரிப்பு குழு தொடங்கியது. அப்போது, சென்சார் போர்டு சொன்னபடி சில காட்சிகளை நீக்கியும் படத்திற்கு சான்று கிடைக்கவில்லை என்றும் உள்நோக்கத்துடன் படத்தை ரிலீஸ் செய்யவிடவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

தலா அரை மணி நேரமாக இருதரப்பும் தங்களுக்கு வாதங்களை முன் வைத்தன. அனைத்து தரப்பு வாதங்களை கேட்டு கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து இன்றே தீர்ப்பு கிடைக்கும், ஜனநாயகன் படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்ததால் ஜனநாயகன் எப்போது ரிலீசாகும் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version