மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு மாற உள்ளதாகக் கூறப்படும் தகவலால், அம்மாநில அரசியல் பரபரப்பாகி உள்ளது.
மகாராஷ்டிராவை கோலோச்சி வந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி கடந்த 2022ஆம் ஆண்டு பிளவை சந்தித்து உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என இரண்டாக உடைந்தது.
இதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி போட்டதால் ஏற்கனவே இருந்த ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவோடு முதலமைச்சரானார்.
இந்திய தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனை என அங்கீகரித்ததோடு, அக்கட்சியின்வில், அம்பு சின்னத்தை வழங்கியது.
உத்தவ் தாக்கரே அணியோ, ‘உத்தவ் பாளா சாகேப் தாக்கரே‘ (UBT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடியாக உத்தவ்தாக்கரே சிவசேனையில் எம்.பி.க்களாக உள்ள 9 பேரில் 7 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்பு
தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனையில் 9 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கான உறுதி தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை மேலும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

