வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார்.

திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சேலத்​தில் நடந்த இளைஞரணி மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், ‘உதயநிதி மட்​டும் எனது வாரிசு கிடை​யாது.

இங்கு கூடி​யுள்ள அனை​வரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்​றார். அத்​தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடி​யுள்​ளோம். திமுக​வில் மட்​டும்​தான் இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் மாநாடு​போல நடத்​தப்​படும். 75 ஆண்​டு​களைக் கடந்​துள்ள திமுக​வுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும்.

குஜ​ராத்​தில் அமித்ஷா பேசும்​ போது ‘பிஹாரில் வெற்றி பெற்​றுள்​ளோம். அடுத்து தமிழ்​நாடு​தான்’ என்று பேசி​யுள்​ளார். எவ்​வளவு மிரட்​டி​னாலும், அதை எதிர்​கொள்ள திமுக இளைஞரணி தயா​ராக உள்​ளது.

சென்​னை​யில் நடந்த அதி​முக பொதுக்​குழு​வில் 2026-ல் பழனிச்​சாமியை தமிழக முதல்​வ​ராக்​கு​வோம் என்று தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளனர். அதி​முக தற்​போது இன்​ஜின் இல்​லாதகாராக உள்​ளது.

அடுத்த 4 மாதங்​களுக்கு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​களை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். வான​வில் அழகாக இருக்​கும். அதைப் பார்க்க மக்​கள் கூடு​வார்​கள். ஆனால், வான​வில் நிரந்​தரம் கிடை​யாது.

தமிழகத்​தில் உள்ள 70 ஆயிரம் பூத்​களி​லும் மிகப் பெரிய வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும்.

இவ்​வாறு உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version