புதுச்சேரி சட்டப்பேரவைக்கும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் இணைந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் விஜய்யின் தவெக ஈடுபடவில்லை.

ஆனால் புதுச்சேரியில் தவெக கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை அக்கட்சி தரப்பு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில், தவெக  தொடங்கியபிறகு புதுச்சேரியில் முதல்முறையாக இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார்.

அப்போது, தவெக கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது, காவல்துறை பாதுகாப்பு வழங்கியது உள்ளிட்டவற்றுக்காக என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான புதுச்சேரி அரசை பாராட்டியதோடு, அக்கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமிக்கும் தமது நன்றியை விஜய் தெரிவித்தார். இதேபோல் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் கூட்டத்தில் பேசியபோது புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில் விஜய் பேசியபோது, திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

இந்த பேச்சின் மூலம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறது என்பதை சூசகமாக விஜய் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தவெக தேர்தலில் போட்டியிட இருப்பதை விஜய் சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாக அவை கூறியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version