தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்திருந்த நிலையி காலை 11 மணி வரை பிரச்சாரம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்திற்கு ஒதுக்கிய பகுதிக்கு விஜய் சாலை மார்க்கமாக வர தாமதம் ஏற்பட்டது. வழி நெடுகிலும் திரண்ட மக்கள் கூட்டத்தால் விஜய் வாகனம் ஊர்ந்து சென்றது.

விஜய்யை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள், மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்துள்ளதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரச்சாரத்தை ஒட்டி ஆம்புலன்ஸ் வசதியும், போலீசார் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் விஜய் பேச தொடங்காத நிலையில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளாக சுட்டிக்காட்டி விஜய் பேசுவார் என்றும், குமாரபாளையத்தில் நடந்த கிட்னி திருட்டு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு அருகே விஜய்க்கு கும்பம் மரியாதை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version