Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஆணவ கொலைக்கு விஜய் குரல் கொடுக்கவில்லையே ஏன்?… திருமா கேள்வி…
    அரசியல்

    ஆணவ கொலைக்கு விஜய் குரல் கொடுக்கவில்லையே ஏன்?… திருமா கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 12, 2025Updated:August 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆணவக் கொலைக்கு எதிராக விஜய் குரல் கொடுக்காதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளர்.

    தொடர் ஆணவ படுகொலைகளை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,

    ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வேண்டும். மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, அவரது தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும். இந்த ஆணவ படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இந்த படுகொலைகளை செய்யக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 40 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த ஆணவ படுகொலைகள் நடக்கிறபோது பெரிய கட்சிகளும், புதிய கட்சிகளும் வாய் திறப்பதில்லை.

    நடிகர் விஜய்யால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்கக்கூட முடியவில்லை. தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கிற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகள் மட்டும் அ.தி.மு.க.விற்கு வேண்டும். ஆனால் அவர்களுக்காக அ.தி.மு.க. பேசுவதில்லை. இன்றைக்கு இந்த ஆணவ படுகொலையை விவாதிக்ககூடிய அளவுக்கு சூழ்நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் உருவாக்கி உள்ளது. ஆணவ கொலைகள் காலம் காலமாக இருக்கிறது.

    கவினை ஆணவ படுகொலை செய்ததை சிலர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அபாண்டமான பலியை சுமத்துகிறார்கள். அவதூறு பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் துணிச்சல் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த சட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்தால் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பரிணாமம் பெற முடியும். பல மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய முன்மாதிரி அரசை நீங்கள் நடத்துகிறீர்கள் என்று வரலாற்றில் பதிவாகும்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி கேள்வி…
    Next Article விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.