ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்.ஆர் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யவன்ஷி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சீசன் முழுவதும் ஆர்.ஆர் அணிக்காக சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 நேற்றைய முக்கியமான போட்டியிலும், சூர்யவன்ஷி தூணாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அபாரமாக விளையாடிய அவர் 96 ரன்கள் குவித்து சதத்தை நழுவவிட்டாலும், அணியின் வெற்றிக்கு கடைசி வரை வழிவகுத்தார். எனினும், மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் ஆர்.ஆர் அணி இறுதியில் தோல்வியைத் தழுவியது.

முழுத் திறமையையும் வெளிப்படுத்தியும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில், போட்டியின் முடிவில் சூர்யவன்ஷி மனமுடைந்து அழுதார். சக வீரர்கள் அவரைத் தேற்ற முயன்ற போதிலும், அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இந்த சீசன் முழுக்க கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு சூர்யவன்ஷி உழைத்தார். ஆனால், இந்தத் தோல்வி அவரை நிலைகுலையச் செய்துவிட்டது.” என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://x.com/cricsam02/status/2060536707678941418? 

சூர்யவன்ஷி கண்ணீர் சிந்தும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், “வெற்றி, தோல்விகளைத் தாண்டி கிரிக்கெட் விளையாட்டின் மீது அவர் வைத்திருக்கும் அர்ப்பணிப்பும் காதலும் வியக்க வைக்கிறது” என்று அவரைப் பாராட்டி, தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version