Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»15 வருடத் தொடர் தோல்வி ; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள் !!!
    விளையாட்டு

    15 வருடத் தொடர் தோல்வி ; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள் !!!

    Editor web2By Editor web2December 7, 2025Updated:December 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251207 210047
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரில் இன்று இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது.

    20251207 210008

    போட்டி சுருக்கம் :

    இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 136 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    பின்னர் விளையாடி இங்கிலாந்து அணி அதனுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 241 ரன்கள் மட்டும் தான் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 77 ரன்கள், பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் ( முக்கியமாக ஜோ ரூட் ) விக்கெட் என போட்டி முழுவதும் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார். மிட்செல் ஸ்டார்க் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது தனிச்சிறப்பு.

    வருட கணக்கில் தோல்வி  அடைந்து வரும் இங்கிலாந்து அணி :

    20251207 205527

    தற்பொழுது கதை என்னவென்றால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 14 வருடம் 11 மாதம் ஆகியும் இதுவரை ஆஸ்திரேலிய அணியை ஒருமுறை கூட இங்கிலாந்து அணியால் வீழ்த்த முடியவில்லை. மொத்தமாக இன்று நடந்து முடிந்த போட்டியை சேர்த்து 17 போட்டிகளில் 15 தோல்வி மற்றும் 2 டிரா என இங்கிலாந்து அணி வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறது.

    ஐந்து போட்டிகள் கொண்ட இந்த நடப்பு டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் மீண்டும் வர முடியும். அதையும் கடந்து வெற்றி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.

    20251207 210040 scaled

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்க்கையில் மேற்கூறிய இரண்டும் நடப்பது மிகவும் கடினம். இங்கிலாந்து அணி மீண்டும் வந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்த இரண்டில் எது நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.

    Ashes Test cricket Australia england Micheal Neser Mitchell Starc
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘வாரணாசி’ டிஜிட்​டல் உரிமை ரூ.1,000 கோடி? படத்தை வாங்க கடும் போட்டி
    Next Article ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்ற லாண்டோ நோரிஸ் !!!
    Editor web2
    • Website

    Related Posts

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    December 23, 2025

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.