அனுபவமற்ற அல்லது தகுதியற்ற ஒருவர் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டால், அது முழு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அக்தர் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், வாரியத்தின் கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும் கூறினார். வலுவான தலைமை இல்லாமல், அணியின் செயல்திறன் பாதிக்கப்படும் என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி குறித்து விமர்சித்துள்ளார்.
மேலும், நீண்ட காலமாக அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தும், முக்கியமான போட்டிகளில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறும் மூத்த வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பிய அக்தர், சில வீரர்கள் திறமையான செயல்திறன் இன்றி “நட்சத்திரங்கள்” ஆக உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவே அணியின் மிகப்பெரிய பலவீனமாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அணித் தேர்வு செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், தவறான முடிவுகளும் அணியின் சமநிலையை பாதித்து வருவதாக கூறிய அக்தர், தகுதி இல்லாதவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவது எந்த அமைப்பிலும் பெரிய தவறு என்றும், அது முழு அமைப்பின் செயல்திறனையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
அனுபவமற்ற அல்லது தகுதியற்ற ஒருவர் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டால், அது முழு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அக்தர் கூறினார். கிரிக்கெட் வாரியத்திற்குள் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்கம் இப்போது நேரடியாக மைதானத்தில் உணரப்படுவதாகவும், அணியின் மன உறுதியும் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் தற்போது குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தற்போது நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா அதே எண்ணிக்கையிலான புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
