2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை அடுத்து, பாகிஸ்தானில் மக்கள் கோபத்தில் உள்ளனர். தோல்வியால் மனமுடைந்த ஒரு ரசிகர், கோபத்தில் தனது டிவியை உடைக்கும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

நேற்று கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அந்தவகையில் போட்டிக்கு பின் நிகழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DUyYNQ3k8Ck/?utm_source=ig_web_copy_link

பாகிஸ்தானின் தோல்வியால் வருத்தமடைந்த ஒரு ரசிகர், கோபத்தில் தனது டிவியை உடைப்பதைக் காட்டும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நீண்ட காலத்திற்குப் பிறகு நடைபெற்றதால், இரு நாடுகளின் ரசிகர்களின் உணர்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. இந்தியாவின் வெற்றியுடன், சில பாகிஸ்தான் ஆதரவாளர்களின் கோபம்  இவ்வாறாக வெளிப்பட்டது.

தோல்வியைத் தொடர்ந்து, குழு A இல் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, வரவிருக்கும் போட்டிகள் பாகிஸ்தானுக்கு முக்கியமானதாகிவிட்டன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version