இந்​திய பிக்​கிள்​பால் சங்​கத்​தின் ஆதர​வுடன் டெல்​லி​யில் உள்ள கே.டி.ஜாதவ் உள்​ விளை​யாட்டு அரங்​கில் வரும் டிசம்​பர் 1 முதல் 7 வரை இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடை​பெற உள்​ளது.

இந்த தொடரில் கலந்து கொள்​ளும் அணி​களின் அறி​முக நிகழ்ச்சி சென்னை கிண்​டி​யில் நடை​பெற்​றது. இதில் மும்​பை, பெங்​களூரு, சென்​னை, ஹைத​ரா​பாத், குர்​கான் ஆகிய நகரங்​களை மைய​மாக கொண்ட மும்பை ஸ்மாஷர்​ஸ், பெங்​களூரு பிளாஸ்​டர்​ஸ், சென்னை சூப்​பர் வாரியர்​ஸ், ஹைத​ரா​பாத் ராயல்​ஸ், குர்​கான் கேப்​பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணி​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக்​கில் மொத்​தம் 6 அணி​கள் கலந்து கொள்ள உள்​ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்​னர் அறிவிக்​கப்​படும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​தனர். நிகழ்ச்​சி​யில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version