ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று (மார்ச் 30, 2026) கௌஹாத்தியில் நடைபெற்ற சிஎஸ்கே – ராஜஸ்தான் மோதலில், ஜடேஜா தனது முன்னாள் அணியான சிஎஸ்கே-வை எதிர்கொண்டார். போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்கள் ‘ஜட்டு… ஜட்டு…’ என உற்சாகமாக முழக்கமிட்டனர். அப்போது எல்லையோரம் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா, ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நின்ற காட்சிகள் கேமராவில் பதிவாகின.
https://x.com/DinaMaalai/status/2038868654918685108?
இப்போட்டியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஷிவம் துபே விக்கெட்டை வீழ்த்திய பின் அவர் செய்த ‘கன் செலிப்ரேஷன்’ (Gun Celebration) வைரலானது. போட்டிக்குப் பின் பேசிய அவர், “சிஎஸ்கே போன்ற ஒரு அணியில் இருந்து பிரிந்தது ஆரம்பத்தில் மிகவும் கடினமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருந்தது. ஆனால் மாற்றங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தேன். இப்போது நான் எனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய ராஜஸ்தான் அணிக்காக மீண்டும் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
