கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.
உலகின் முன்னனி வீர, வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 7-5, 6-3, என்ற செட் கணக்கில் ஒசாகாவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதவுள்ளார்.
