நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார், ஆனால் இந்தியா தொடரை இழந்தது. போட்டிக்குப் பிறகு, நியூசிலாந்து அணிக்காக வெற்றி இன்னிங்ஸை விளையாடிய டேரில் மிட்செலுக்கு விராட் தனது ஜெர்சியை பரிசளித்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஒரு சிறப்பான சதத்தை அடித்தபோதிலும், இந்திய அணி தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் இந்தியா தனது சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை. தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு,தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்த டேரில் மிட்செலுக்கு, கையொப்பமிட்ட ஜெர்சியைப் பரிசளித்து அவரை ஆரத்தழுவினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் டேரில் மிட்செல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் ஆவர். மிட்செல் 176 சராசரியுடன் 352 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார். இறுதிப் போட்டியில் 124 ரன்கள் எடுத்ததன் மூலம், விராட் கோலி தனது மொத்த ரன்களை 80 சராசரியுடன் 240 ஆக உயர்த்தினார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version