தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் விஜய், முதல் நாளிலேயே தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு அவர் கையெழுத்திட்டார். இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் நிவாரணத்தை அளிக்கும். ஆனால் இதில் பெரும் குழப்பம் காலையில் முதல் இருந்து வந்தது.

இந்தநிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அனைத்து மாவட்டங்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், மே 10-ஆம் தேதி முதல் நுகர்வோருக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடும் போது, தவெக அரசின் புதிய இலவச மின்சாரத் திட்டத்தின் விதிகளின்படி கணக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தபடி, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முதல் 200 யூனிட் மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அதேநேரம், 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட பொரியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. மென்பொருளில் செயல்படுத்தப்பட்ட புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, மின்சார வாரியம் இதனை மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version