Close Menu
    What's Hot

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி!. உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!. குவியும் பாராட்டு!
    தமிழ்நாடு

    குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி!. உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!. குவியும் பாராட்டு!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai 3 savaran gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த காலகட்டத்திலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையின் இலக்கணமாகச் செயல்பட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர். குப்பையில் தவறுதலாக விழுந்த தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த அவரது மனிதநேயச் செயல் ஒட்டுமொத்த கோவை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளது.

    கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69-ல் உள்ளது பாரதி பார்க் 4-வது வீதி. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் போது, எதிர்பாராத விதமாகத் தங்களின் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு குப்பையாக வீசியுள்ளனர்.

    அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சித் தூய்மைப் பணியாளர் சக்திவேல், தான் சேகரித்த குப்பைகளைக் கையாளும் போது அதற்குள் ஏதோ மின்னுவதைக் கண்டுள்ளார். உற்றுப் பார்த்தபோது அது 3 பவுன் தங்கச் சங்கிலி என்பது தெரியவந்தது.

    பேராசைப்படாமல், அந்த நகையைத் தன்வசப்படுத்திக் கொள்ளச் சற்றும் யோசிக்காத சக்திவேல், உடனடியாக அந்த நகையின் அசல் உரிமையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்கள் முன்னிலையிலேயே அந்தத் தங்கச் சங்கிலியைப் பத்திரமாக ஒப்படைத்தார். இழந்த நகை மீண்டும் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்துபோன உரிமையாளர்கள், தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தனர்.

    தூய்மைப் பணியாளரின் இந்த உன்னதமான செயல் குறித்து அறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர், அவரது நேர்மையைப் பெரிதும் பாராட்டியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர் சக்திவேலுக்கு பொன்னாடை அணிவித்து, தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ஆணையர் தெரிவித்துக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டுக்காக 4 கோரிக்கைகள் – பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்தது என்னென்ன?
    Next Article 15 கோடி பார்வையாளர்களை கடந்து நானியின் ‘ஆயா ஷேர்’ பாடல் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    May 31, 2026

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.