Close Menu
    What's Hot

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை : டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை… மேலும் 6 பேர் கைது… 17 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி…
    தமிழ்நாடு

    சென்னை : டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை… மேலும் 6 பேர் கைது… 17 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 8, 2025Updated:August 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் புளூகான் ராஜ்குமார். 37 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ள நிலையில் ’பி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விலகிய இவர், சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

    அதிமுகவிலும் நிர்வாகியாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் குடும்பத்துடன் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி பிற்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது, அங்கு சுமார் 9 பேர் கையில் அரிவாளுடன் கூடியுள்ளனர். அவர்களில் 5 பேர் வீட்டிற்குள் புகுந்த போது, ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இருப்பினும் அவரை மடக்கி பிடித்த 5 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

    அதாவது கடந்த 6-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் 17 வயது மட்டுமே நிரம்பியவர்கள். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், யுவனேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

    “நான் 2 வயது குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை செந்தில்குமார் அமைந்தகரையில் வைத்து கொலை செய்யப்பட்டார். அப்போது நான் ஒன்றும் அறியாத குழந்தை. தற்போது நான் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறேன். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர்.

    2 பேர் கொலை செய்யப்பட்டனர். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ராஜ்குமாரும் ஒருவர். அவர் 2021-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலையானார்.

    என்னை பொறுத்தமட்டில் எனது தந்தை கொலை செய்யப்பட்டதை பெரிதுப்படுத்தாமல் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜ்குமார் என்னை பார்க்கும் போதெல்லாம் உன் தந்தையை நான்தான் கொன்றேன் என்று எனது மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி வந்தார். ராஜ்குமாரை பொறுத்தமட்டில் அவரது சாவை அவரே தேடிக்கொண்டார். அடிக்கடி என்னை சீண்டியதால் நானும், எனது நண்பர்களும் ராஜ்குமாரை போட்டுத்தள்ள முடிவு செய்தோம்.

    இதற்கிடையில் ஒரு அடிதடி வழக்கில் போலீசார் என்னை சேர்த்துவிட்டனர். எனது தந்தை இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அவரை தீர்த்துக்கட்டிய ராஜ்குமாரை இப்போதுதான் தீர்த்துக்கட்டினேன். எனக்காக எனது நண்பர்களும், என்னுடன் இணைந்து இதனை செய்தார்கள்” என்று யுவனேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து யுவனேசும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். அத்தோடு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோனியின் முதல் பேடல் விளையாட்டு மையம்… அனிரூத், ருத்துராஜ் திறந்து வைத்தனர்…
    Next Article ராகுல்காந்தி அளித்த தரவுகள்… தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது… ப.சிதம்பரம் காட்டம்…
    Editor TN Talks

    Related Posts

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    July 9, 2026

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.