கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூர் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து கணேஷ் வயது 49 என்பவர் இயக்கி உள்ளார். இதில் நடத்துனர் சிவராஜ் உள்பட பேருந்தில் 72 பயணிகளை ஏற்றி வால்பாறை வந்து கொண்டு இருந்தது. அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 – வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல் துறையினர், 108 ஆம்புலன்சில் உதவியுடன் அனைவரும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். இதில் ஓட்டுநர் கணேசன் என்பவர் பலத்த படுகாயம் அடைந்தார். அவரின் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கை, கால், தலை போன்ற பல்வேறு இடங்களில் படுகாயங்கள் அடைந்த பயணிகள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
