திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்  ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது. திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளன. 2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதலமைச்சர் யாரிடம் கேட்டார். சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும். தவெக குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மற்றோரு நாள் பேசலாம் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version