தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விண்ணை தொடும் ஆம்னி பேருந்து கட்டண கொள்கையை திமுக அரசு கண்டு கொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைச்சல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?

திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவையை கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியை மக்கள் கப்பலேற்றும் நாள் வெகுதூரமில்லை” என கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version