தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தளி தொகுதியிலும், கிஷன் ரெட்டி அரந்தாங்கியிலும், சுரேஷ் கோபி விளவங்கோடு தொகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல், கிரண் ரிஜ்ஜு பத்மநாபபுரத்திலும், பந்தி சஞ்சய் குமார் திருப்பத்தூரிலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாத்தூர் தொகுதியிலும் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் தங்கி தேர்தல் பணிகளை நேரில் மேற்பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர்களுடன் இணைந்து கட்சியின் தேசிய நிர்வாகிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் சுஹாசினி, ஆந்திர மாநில துணைத்தலைவர் நாராயணன் மற்றும் தேசிய ஊடக செய்தி தொடர்பாளர் காயத்ரி ஆகியோர் அந்தந்த பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், ஆந்திர மாநில மருத்துவத்துறை அமைச்சர் சசிகுமார் யாதவும் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதால், பாஜகவின் தேர்தல் களம் மிகுந்த விறுவிறுப்பை அடைந்துள்ளது. தேசியத் தலைவர்களின் இந்தத் தொடர் வருகை தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version