Close Menu
    What's Hot

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருடுப்போன நகைகளைக் கண்டுபிடிக்கத் தவறினால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
    தமிழ்நாடு

    திருடுப்போன நகைகளைக் கண்டுபிடிக்கத் தவறினால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    திருடுப்போன நகைகளைக் காவல்துறையினர் கண்டுபிடிக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
    தனது வீட்டில் திருடுபோன 75 பவுன் நகையைப் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்  இந்த வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.
    இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல்துறையினர் வழக்கை முடித்துவைக்கும் நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    திருடுபோன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீதம் தொகையைத் தமிழக அரசு புகார்தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, துரிதமாகவும், திறமையாகவும் புலன் விசாரணை செய்து கண்டுபிடிப்பதற்காக, மாவட்டந்தோறும் காவல்துறையில் சிறப்புப் பிரிவை (Special Investigation Team – SIT) உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புலன் விசாரணை நடத்தி, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளைத் தீர்ப்பதற்காக, திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை (SIT) மாவட்டம் தோறும் காவல்துறையில் உருவாக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகளின் திறனை மேம்படுத்தவும், புகார்தாரர்களுடன் தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    விசாரணை அதிகாரிகளுக்குச் சிறப்புத் தொழில்நுட்பப் புத்துணர்வுப் பயிற்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த பயிற்சியில், புலன் விசாரணையின் நவீன உத்திகள் மற்றும் புகார்தாரருக்கும், அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் நவீன முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வலியுறுத்தியுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாற்று மாசு அதிகரிப்பு எதிரொலி… டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
    Next Article நவ.26-ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

    December 26, 2025

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.