Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருடுப்போன நகைகளைக் கண்டுபிடிக்கத் தவறினால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
    தமிழ்நாடு

    திருடுப்போன நகைகளைக் கண்டுபிடிக்கத் தவறினால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    திருடுப்போன நகைகளைக் காவல்துறையினர் கண்டுபிடிக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
    தனது வீட்டில் திருடுபோன 75 பவுன் நகையைப் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்  இந்த வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.
    இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல்துறையினர் வழக்கை முடித்துவைக்கும் நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    திருடுபோன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீதம் தொகையைத் தமிழக அரசு புகார்தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, துரிதமாகவும், திறமையாகவும் புலன் விசாரணை செய்து கண்டுபிடிப்பதற்காக, மாவட்டந்தோறும் காவல்துறையில் சிறப்புப் பிரிவை (Special Investigation Team – SIT) உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புலன் விசாரணை நடத்தி, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளைத் தீர்ப்பதற்காக, திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை (SIT) மாவட்டம் தோறும் காவல்துறையில் உருவாக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகளின் திறனை மேம்படுத்தவும், புகார்தாரர்களுடன் தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    விசாரணை அதிகாரிகளுக்குச் சிறப்புத் தொழில்நுட்பப் புத்துணர்வுப் பயிற்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த பயிற்சியில், புலன் விசாரணையின் நவீன உத்திகள் மற்றும் புகார்தாரருக்கும், அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் நவீன முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வலியுறுத்தியுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாற்று மாசு அதிகரிப்பு எதிரொலி… டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
    Next Article நவ.26-ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.