கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி சென்ற வாகனம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது, ரயில் மோதி வாகனம் இழுத்து செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெர்ம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5லட்சம் வழங்கிடவும் – பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.1லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version