தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் கோப்பில் கையெழுத்திடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் முகப்புப் படமாக மாற்றப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த மாற்றம் உடனடியாகச் செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சரின் கம்பீரமான தோற்றம் மற்றும் அவர் மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடும் காட்சிகள் தற்போது அரசு இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. புதிய அரசு பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே டிஜிட்டல் தளங்களிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது,
