கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருத்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து பைக் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணத்தில் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரும்  துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்திபோது சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர்கள் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காலில் குண்டு பாய்ந்து 3 பேரும் பிடிபட்டனர்.

விசாரணையில் 3பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன்  என்பது தெரியவந்தது. பின்னர்  காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்  விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய  இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

அதில் கருப்பசாமி,காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் அவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கல்லூதி மாணவியை கூட்டு பாலியல் துப்புறுத்தல் செய்த 3 பேரை நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version