Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Editor web2By Editor web2June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Court hammer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து மேலும் பல முக்கியத் தடயங்கள், வாக்குமூலங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கு இடையே, சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கியக் குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்றத்தின் கதவுகளைப் பூட்டி, “இன்-கேமரா” (In-Camera Proceedings) முறையில் பூட்டிய அறையில் வைத்து இருவரிடமும் தனித் தனியே தீவிர விசாரணை நடத்தினார்.

    காவல்துறை தரப்பில் குற்றவாளிகளை விசாரித்துச் சாட்சியங்களைச் சேகரிக்க 5 நாட்கள் நீதிமன்றக் காவல் கட்டாயம் தேவை என அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி பகவதி அம்மாள், காவல் துறையின் 5 நாட்கள் கோரிக்கையைச் சற்றே குறைத்து, 3 நாட்கள் மட்டும் (ஜூன் 6-ஆம் தேதி வரை) இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகளை காவல்துறையினர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று, சூலூர் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துக் கோவை மாவட்ட தனிப்படை போலீஸார் “கஸ்டடி” விசாரணையைத் தொடங்குவதற்கு தற்பொழுது துரிதப்படுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    Next Article காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.