Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களை கை, கால்களை அமுக்கி விட வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை
    தமிழ்நாடு

    மாணவர்களை கை, கால்களை அமுக்கி விட வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 09 03 153043
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தருமபுரி அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி மாணவர்கள் அமுக்கி விட்ட வீடியோ வெளியான நிலையில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில், மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசையின் மீது படுத்து கொண்டு மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கை கால்களை அமுக்கி விட வைத்துள்ளார்.

    தலைமை ஆசிரியை கலைவாணி தினமும் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறகூடாது எனவும் கூறி மாணவர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியையின் கை, கால்களை அமுக்கிவிட்டு பணிவிடை செய்யும்  வீடியோ வெளியான நிலையில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர்  மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதேநேரம் பெற்றோர்களும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியையின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்தனர். அதன் பிறகு தலைமை ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணி அப்பியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இருந்தபோதிலும் தலைமை ஆசிரியையின் இது போன்ற செயலுக்கு அரசு சார்பில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் சஸ்பெண்ட் செய்யாமல் பணியிடை மாற்றம், டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    anbil mahesh arur dharmapuri government school school student
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தாயார் குறித்து அவதூறு..கலங்கிய மோடி” பிரதமருக்கு இதெல்லாம் நினைவில் இருக்கிறதா?…
    Next Article பொன்முடி பேசிய மொத்த வீடியோவும் நீதிமன்றத்தில் தாக்கல்
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.