திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகளவில் ஊழல்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் மோசமாக நடத்துவதாக குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு, திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; நான்கே முக்கால் வருடத்தில் திமுக மதுரை மக்களுக்கு என்ன செய்தது? இனி தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

முதல்வர், துணை முதல்வர், என யார் என்ன பேசினாலும், அடுத்து ஆளப்போவது அதிமுக தான் என்றும் அதிமுகவை விமர்சிக்கவில்லையென்றால் முதல்வருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது என்றும் பேசியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமையாகவே செயல்படுவதாக கூறினார்.

மேலும், மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version